ஓசி !!!


wஆபீஸ் தபால்களை அனுப்பும் உறை ( கவர் ) மீது சர்வீஸ் ஸ்டாம்ப் ஒட்டி ‘ இந்திய அரசுப் பணிக்கு மட்டும் ‘ ( On I . G . S . Only ) என்ற எழுத்துக்களை முத்திரை குத்தும் வழக்கம் இப்போது உள்ளது .


சர்வீஸ் ஸ்டாம்ப் ஒட்டும் பழக்கம் 1865 – ல்தான் நடைமுறைக்கு வந்தது . அதற்கு முன்பு , கிழக்கிந்திய கம்பெனியாரின் ஆட்சி நடைபெற்றபோது , ஆங்கிலேயர்கள் தங்கள் ஆபீஸ் தபால் உறை மீது


‘ கம்பெனி சேவைக்கு மட்டும் ‘ ( On Company Service Only ) என்பதைச் சுருக்கி O . C . S . என்கிற மூன்று ஆங்கில எழுத்துக்களை முத்திரை குத்தினார்கள் . இந்த கவர்களின் மேல் ஸ்டாம்ப் ஒட்டத் தேவை இல்லை . இது இலவச சேவை ! இதை ‘ ஓசி சர்வீஸ் ‘ ( O. C . S .) என்று சொல்லத் தொடங்கினார்கள் .


நாளாவட்டத்தில் O . C . என்ற இரண்டு எழுத்துக்களும் ‘ ஓசி ‘ என்ற தமிழ்ச் சொல்லாகி , நிலைத்துவிட்டது .

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in அரசியல், அறிவியல், கணிதம், கலை, கல்வி, சமூகம், தமிழ், நடப்பு, பண்பாடு, பொது. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக