இன்று ஒரு தகவல் 13 – சுறா , சுறா !!!

னைவருக்கும் வணக்கம் உலகத்தில் அதிசயம் என்றாலே அனைவருக்கும் அதன் மீது ஒரு ஆர்வம் தொற்றிக்கொள்ளும் அதிலும் கடலில் பல அதிசயம் என்றால் சொல்லவா வேண்டும் . இப்பொழுது நாம் வசிக்கும் பூமியின் நிலப்பரப்பில் இதுவரை நாம் கண்டு பிடித்துள்ள உயிர்களுடன் ஒப்பிடும்பொழுது இதைப்போல் இன்னும் எழுபது சதவீதத்திற்க்கும் அதிகமான பல மர்மங்கள் கடலுக்குள் இருப்பதாக ஒரு மிகப்பெரிய அறிக்கை வெளியாகி உள்ளது . சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும் இன்று அதில் ஒரு சிறிய தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் . சிலருக்கு மீன்கள் என்றால் மிகவும் பிடிக்கும் பலருக்கு மீன்கள் என்றாலே பிடிக்காது . ஆனால் இந்த இரு தறபினரும் மீன்களை ரசிக்கும் தன்மை உடையவர்கள் என்பது மட்டும் உண்மை . பொதுவாக உனக்கு எந்த மீனைப் பார்த்தால் பயம் என்று கேட்டால் நூற்றில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் அனைவரும் சொல்லும் ஒரே பதில் சுறா என்பதுதான் .

காரணம் என்று பார்த்தால் இந்த வகை மீன்கள்தான் அதிகமாக விபத்துக்களையும் . உயிர் சேதங்களையும் ஏற்படுத்துகின்றன . அதுதான் உண்மையும் கூட .சரி அந்த சுறாக்கலில் அப்படி என்னதான் இருக்கிறது நாமும் பார்த்துவிடுவோமே .

சுறாக்களில் பல வகை உண்டு. வெள்ளை சுறா தான் மிகவும் பயங்கரமானது, சுறா மீன்களில் அபூர்வமானதும்,பயங்கரமனதுமாக மனிதனையும் தின்பது. வெள்ளைச் சுறாதான். திமிங்கலச் சுறாதான் சுறாமீன் இனத்தில் பெரியது. அதிகபட்ச நீளம் 60 அடி. சுத்தித்தலை சுறாவும் கொடுமையான வகையைச் சார்ந்தது தான். சுறாக்களில் மந்தமான சுறாக்களும் உண்டு. இரையை வேட்டையாடுவதில் சுறாவுக்கு வழிமையான தாடையும், கூர்மையான பற்களும் உள்ளன. பொதுவாக, சுறா இறந்த பிராணிகளை தின்று விடும். எனவே, சுறாவை நீந்தும் தோட்டி என்பர்.

200 பவுண்ட் எடையுள்ள ஆமையைக்கூட ஒரு சுறாமீன் தின்றுவிடும். சுவாச உறுப்பு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு அது எப்போதும் வளைந்து வளைந்து சுழலும். மனிதனைத் தின்னும் சுறாமீன் கரையோரங்களுக்கு இரையைத் தேடி வருவதுண்டு. ஆட்களை இழுத்துக் கொண்டு உடனே கடலுக்குள் திரும்பிவிடும்.

ழ்கடலில் உணவுத் தட்டுப்பாடு சில சமயம் மீன்களுக்கு ஏற்படுவதுண்டு. இதை எதிர்கொள்ள பல மீன்கள் தனிச் சிறப்பான ஏற்பாடுகளை பெற்றுள்ளன. பெருந்தீனி விழுங்கிகள் (கியாஸ்மோடஸ்நிகர்) என்று ஒரு வகை மீன்கள் உண்டு. இவற்றின் வாய்களின் அளவைப் போன்று மும்மடங்கு பெரிய அளவுள்ள பிற உயிர்களை விழுங்குவதற்கு ஏற்ப அவற்றின் வயிறு நெகிழ்ந்து கொடுத்து விரிவடையும். இம்மீன்களின் வளைவான பிச்சுவாக்கத்தி போன்ற பற்கள் பிடித்த இரையை தப்பி விடாதவாறு பாதுகாக்கின்றன.

டற்பரப்பில் மனிதர்களுக்கு ஆபத்து வரும் வேளைகளில் டொல்பின்கள் மனிதர்களைக் காப்பாற்றுவதாக பல கதைகளில் படித்திருப்பீர்கள்.ஆழ்கடலில் பல ஆபத்துக்கள் நிறைந்திருக்கும், இவை பல வடிவங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.இயற்கை அனர்த்தங்கள்,எதிர்பாராத விபத்துக்கள் தவிர பயங்கரமான ஆபத்துக்கள் பல இருக்கிறது.இப்படியான ஆபத்துக்கள் வரும் வேளையில் டொல்பின் இன மீன்கள் மனிதரைக் காப்பாற்றியதாக பல தகவல்கள் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் வெளியாகியிருக்கிறது.

ண்மையில் நியுசிலாந்து தீவிப்பகுதியை அண்மித்த கடலில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சேவகர்களுக்கு இவ்வகையான அநுபவம் ஒன்று நேர்ந்துள்ளது.சுறா மீன்களில் அபூர்வமானதும்,பயங்கரமனதுமாக வெள்ளைச் சுறாக்கள் கணிக்கப்படுகிறது.வெள்ளைச் சுறாக்கள் பற்றிய ஒரு குறிப்பில் அவை சராசரியாக நான்கு மீட்டர் நீளம் முதல் ஆறு மீட்டர் வரை வளரக்கூடியது எனவும், முக்கோண வடிவிலான 3000 வரையான கூரிய பற்களையும் கொண்டிருக்கக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ர்வதேச ரீதியில் 2003 ம் ஆண்டில் சுமார் 55 வெள்ளைச்சுறாத் தாக்குதல் சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன.மனிதர்களை சாப்பிடுவதில் வெள்ளைச் சுறாக்களே முதலிடம் வகிக்கிறது.எனினும், South Africa, Namibia, California, Florida, Australia வின் அனைத்து பாகங்கள் மற்றும் Malta ஆகிய நாடுகள் வெள்ளைச் சுறாக்களை கொல்வதை சட்டரீதியாக தடைசெய்து, அவ்வினத்தைப் பாதுகாத்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

டந்த சில மாதங்களுக்கு முன்னர் நியிஸிலாந்தின் கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உயிர்காக்கும் சேவகர்கள் Lifeguards குழு ஒன்று நீந்திக்கொண்டிருந்த வேளையில் திடீரென மூன்று மீட்டர் நீளமான வெள்ளைச் சுறா ஒன்று நெருங்கி, விரட்ட ஆரம்பித்திருக்கிறது.
இவ்வேளையில் திடீரென,மேற்பரப்பில் தோன்றிய ஆறு டொல்பின்கள் இந்த மூன்று பேரையும் சுமார் 40 நிமிடங்கள் அளவுக்கு சுற்றி வளைத்து,காப்பரண் ஒன்றை  அமைத்திருக்கின்றன.

வர்கள் பாதுகாப்பாக கரை சேரும் வரை அவர்களை இறுக்கமான வளையம் ஒன்றினை உருவாக்கி,நீந்திப் பாதுகாத்திருக்கின்றன இந்த டொல்பின்கள்.இவ்வேளையில், வெள்ளைச்சுறா மிகவும் நெருங்கியிருந்தாலும், டொல்பின்களின் இறுக்கமான வட்டத்திற்குள் நுழைய முடியாமல் போனதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்று மூன்று வாரங்களின் பின்னரே இவர்கள் தகவலையும் வெளியிட்டுள்ளனர்.இந்த ஆபத்தில் சிக்கிக்கொண்டவர்களில் ஒரு இளம் பெண், அன்றுதான் முதற்தடவையாக இக்குழுவில் இணைந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சுறாமீன் அதிக தூரம் நீந்திச்செல்லும் ஆற்றல் படைத்தது. இதில் நியிஸிலாந்தை சேர்ந்த ஒரு சுறாமீன் ஒரே மூச்சில் 3000 கி.மீ. தூரம் கடலில் நீந்திச்சென்று அதிக தூரம் பயணம் செய்த சுறாமீன் என்ற சாதனை படைத் துள்ளது.

டந்த மார்ச் மாதம் நிï சிலாந்தின் ஸ்டீவர்ட் தீவு பகுதியில் இந்த சுறாமீன் மீது எலக்ட்ரானிக் அடையாள அட்டை ஒன்றை நிபுணர்கள் பொருத்தினார்கள். இந்த பெண் சுறாமீனுக்கு கெரி என்றும் பெயரிட்டு இருந்தனர்.இந்த வெள்ளை சுறாமீன் விடாமல் 3000 கி.மீ. பயணம் செய்து ஆஸ்திரேலியா கடலுக்கு வந்து சேர்ந்தது. அந்த சுறாமீன் பயணம் செய்யும் இடம், ஆழம், பயணநேரம் ஆகியவற்றை அவ்வப்போது அந்த எலக்ட்ரானிக் அட்டை தெரிவித்தது.என்ன நண்பர்களே இந்த சுறா பற்றிய தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் . மீண்டும் ஒரு சிறந்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in இன்று ஒரு தகவல், இயற்கை .உயிரியல் . மீன்கள், சுறா. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக