இங்கு கரையில் பலரை கண்ணீரிலும்…
அங்கு கடலில் பலரை தண்ணீரிலும்…
மிதக்க வைக்கத்தான் மிதவை
அதிசயம் என்று உன்னை
பார்த்து பார்த்து உருவாக்கியாதோ
இந்த அறிவியல் வளர்ச்சி..!!
இன்னும் ஆயிரமாயிரம்
கதை சொல்லும் இந்த சுமைதாங்கி
புன்னகையுடன் ஏற்றிச் சென்றது..! – ஆனால்
அந்த புன்னகையின் ஈரம் காயும்முன்
கரை தொடாமல் மூழ்கிப்போனது..!
எத்தனை ஆசைகள் அங்கு
தண்ணீரில் மிதகின்றதோ இன்னும்
கரை தொடாமல் ..?!
எத்தனை நினைவுகள் இன்னும்
நிழலாடுகிறதோ இந்த கரை தாண்டாமல்..?!
கப்பல் என்று உச்சரிக்கும்
தருணத்தில் எல்லாம்
ஓங்கி ஒலிக்கத்தான் செய்கிறது..!
அந்த தீர்ந்து போன
அதிசயத்தின் அழுகுரல்
அழுது அழுது ஓய்ந்து போன
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
இன்னும் என் செவியருகே…………
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
வழக்கம்போல் அசத்தல் தான்.நானும் எப்போதாவது ஸ்லிப் ஆனா குறை சொல்லலாம்னு பார்த்தா அதுக்கு சான்ஸே த்ராம கலக்கறீங்களே,வாழ்த்துக்கள்
nice!