அனைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .
’ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தை நம் எல்லோருக்கும் நன்கு தெரியும் . நாமும் அதிகமுறை பயன்படுத்தி இருப்போம் . ஆனால் இந்த ’ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார் என்று நம்மிடம் கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது . இந்த ’ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை நம் தமிழர் செண்பகராமன்தான் முதன் முதலில் பயன்படுத்தி இருக்கிறார் !
பனிச் சிறுத்தை இந்தியாவில் இமயமலையில் மட்டும்தான் காணப்படுகிறதாம் !
உலகத்தில் வாழும் பூச்சி இனங்களில் மிகவும் வினோதமான பூச்சி கரப்பான் பூச்சிதானாம் தலையே இல்லாமல் 9 நாட்கள் உயிரோடு வாழும் சக்தி கொண்டவை கரப்பான் பூச்சிகள். அதற்கு மேலும் அதனால் வாழமுடியும். ஆனால் எதுவுமே சாப்பிட முடியாததால் பசியால் வாடியே உயிர்த் துறக்கிறதாம் !
உலகத்தின் மிகவும் பெருமை வாய்ந்த கட்டிடமாக அனைவராலும் அதிசயத்து பார்க்கும் வெள்ளை மாளிகையில் முதன் முதலில் குடியேறிய அமெரிக்க அதிபர் ஜான் ஆடம்ஸ்தானாம் !
நீரிழிவு நோய்க்கு மருந்தான பென்சிலினைக் கண்டுபிடித்தவர் அலெக் ஸôன்டர் ஃப்ளெமிங்தானாம் !
`கொசு கடிக்குது’ என்றால் சில அறிவாளிகள் `அதுக்கென்ன பல்லா இருக்கு?’ என்று கேலி பேசுவார்கள் பார்த்திருப்போம் . நம்மில் பலரும் அதை செய்திருப்போம் . ஆனால் உண்மையாகவே கொசுக்களுக்கும் பற்கள் இருக்கிறதாம் !
உலகத்தில் உள்ள விலங்குகளில் தாண்டி குதிக்க முடியாத மிருகம் யானைதானாம் !
வாத்துக்கு இரு கண்கள் இருந்த போதிலும் ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருக்கிறதாம் . அதன் மற்றொரு கண்ணினால் பார்க்க இயலாதாம் !
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
நீரிழிவு நோய்க்கு மருந்து இன்சுலின், பெனிசிலின் இல்லை நண்பரே…மீள்பதிவு நன்று.
நல்ல தகவல்
உலகின் நீந்தத் தெரியாத ஒரே மிருகம் ஒட்டகமாகும்.
very nice infi buddy..
yes mosquito hav 47 teeth