கவிதைகள் – புதிய மனிதன் ஒற்றை நாணயம்

னவுகள் சுமக்கும்
சுமைதாங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது
உடல் என்ற பெயரிட்டு
ற்றை மனிதனுக்கு
ஆயிரம் பெயர்கள் நேற்று .

பணத்தினால் ஒன்று
பதிவியினால் ஒன்று
பாசத்தினால் ஒன்று
கோபத்தினால் ஒன்று
சாதனையினால் ஒன்று
சாதியினால் ஒன்று
சண்டையினால் ஒன்று
நிறத்தினால் ஒன்று
குணத்தினால் ஒன்று என
ஒவ்வொருவரின் இதழ்களிலும்
உதட்டு சாயம் போல் ஒட்டி
ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தன
சற்றுமுன்வரை….
த்தனையும் மாறிப்போனது
இறந்து போன சில நொடிகளில்
நெற்றியில் ஒட்டிவைத்த
அந்த ஒற்றை நாணயத்தால்…
பிணமென்று . .
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in கவிதைகள், நாணயம், மனிதன், மரணம் (கவிதை), வாழ்க்கை, Kavithai Thuligal, KAVITHAIGAL, poem, Tamil Kavithaigal. Bookmark the permalink.

28 Responses to கவிதைகள் – புதிய மனிதன் ஒற்றை நாணயம்

  1. ப.செல்வக்குமார் சொல்கிறார்:

    ///அத்தனையும் மாறிப்போனதுஇறந்து போன சில நொடிகளில்நெற்றியில் ஒட்டிவைத்தஅந்த ஒற்றை நாணயத்தால்…பிணமென்று . .///உண்மை ..!!

  2. அப்பாதுரை சொல்கிறார்:

    நாலணா ரூவாயாயிடுச்சா? வெலவாசிய என்ன சொல்ல..

  3. சுடர்விழி சொல்கிறார்:

    அருமையான கவிதை !

  4. Jayaseelan சொல்கிறார்:

    //கனவுகள் சுமக்கும் சுமைதாங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது உடல் என்ற பெயரிட்டு….//நல்லா சொன்னிங்க :)///அத்தனையும் மாறிப்போனது இறந்து போன சில நொடிகளில் நெற்றியில் ஒட்டிவைத்தஅந்த ஒற்றை நாணயத்தால்… பிணமென்று///ரசித்தேன் நண்பா…

  5. சௌந்தர் சொல்கிறார்:

    நெற்றியில் ஒட்டிவைத்தஅந்த ஒற்றை நாணயத்தால்…பிணமென்று .//வியந்து ரசித்தேன்

  6. jaisankar jaganathan சொல்கிறார்:

    அருமையான கவிதை

  7. cs சொல்கிறார்:

    ''''அத்தனையும் மாறிப்போனது இறந்து போன சில நொடிகளில் நெற்றியில் ஒட்டிவைத்தஅந்த ஒற்றை நாணயத்தால்… பிணமென்று . .''''arumai nanbare.neenda naatkal aagivittathuithu pola oru kavithai ondrinai padiththu.ennudaya arasaviyilneerthaan arasavai kavignar.

  8. இராமசாமி கண்ணண் சொல்கிறார்:

    நல்லா உரக்க விசில் அடிக்கனும் போல இருக்கு கவிதைய படிச்ச உடனே 🙂

  9. பிரவின்குமார் சொல்கிறார்:

    வாழ்க்கையின் யதார்த்தத்தை விளக்கும் வைர வரிகள்.. ஒற்றைப்பதிவில் ஒற்றை நாணயத்தின் வலிமையையும் வாழ்க்கையின் எளிமையையும் விளக்கீட்டீங்க.. பாஸ்.பணம் ஒன்று பிணம் என்று சொல்லவைத்ததை படம்பிடித்து காட்டும் அருமையான கவிதை..!

  10. சே.குமார் சொல்கிறார்:

    வாவ்… அருமையான கவிதை சங்கர்.

  11. சுசி சொல்கிறார்:

    சரியா சொல்லி இருக்கிங்க..

  12. நாடோடி சொல்கிறார்:

    க‌விதை ந‌ல்லா இருக்கு ந‌ண்ப‌ரே..

  13. Mohamed Faaique சொல்கிறார்:

    பெயர்கள் எல்லாம் சூப்பர்…

  14. hamaragana சொல்கிறார்:

    அன்புடன் நண்பருக்கு வணக்கம் கவிதை நல்ல இருக்கு !!ஆடி அடங்கும் வாழ்கையாட ஆறடி நிலமே சொந்தமடா!

  15. nis (Ravana) சொல்கிறார்:

    எப்படி உங்களால மட்டும் இப்படி எழுத முடியுது.பாராட்டுகள்

  16. ம.தி.சுதா சொல்கிறார்:

    சகோதரா அருமை ஆனால் இப்ப சில்லறைகளை காணமுடிவதில்லையே

  17. கலாநேசன் சொல்கிறார்:

    அருமையான கவிதை !

  18. Sriakila சொல்கிறார்:

    நச்சென்ற வரிகள். அருமை!

  19. philosophy prabhakaran சொல்கிறார்:

    உங்களது கவிதைகள், ஜோக்ஸ், தகவல்கள், பொது அறிவு மொத்தத்தையும் படிக்கும் வாய்ப்பு இன்று கிட்டியது. அனைத்துமே அருமையாக இருந்தன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அம்பிகாபதி – அமராவதி காதல் பற்றிய பதிவும், மனித இனம் தோன்றியது பற்றிய ஆராய்ச்சிப்பதிவும் அருமையாக இருந்தன.

  20. VELU.G சொல்கிறார்:

    நல்லாயிருக்குங்க

  21. ஜில்தண்ணி - யோகேஷ் சொல்கிறார்:

    ரொம்ப லேட்டா படிச்சிருக்கேன் // நெற்றயில் ஒட்டவைத்த நாணயத்தால் பிணமென்று // உண்மைதான் கவிதை அருமை நண்பா 🙂

  22. dineshkumar சொல்கிறார்:

    அருமையான கவி பிணம் போனபின்னும் நின் குணம் பேசும் எனில் நின் குளம் வாழும்வரை நின் புகழ் வழுமில்லையாhttp://marumlogam.blogspot.com

  23. S.M.Raj சொல்கிறார்:

    ///அத்தனையும் மாறிப்போனதுஇறந்து போன சில நொடிகளில்நெற்றியில் ஒட்டிவைத்தஅந்த ஒற்றை நாணயத்தால்…பிணமென்று . .///உண்மை ..!!

  24. கவிதை ஸ்பெஷலிஸ்ட்டே,கலக்கறீங்களே

பின்னூட்டமொன்றை இடுக