பனித்துளிசங்கர் கவிதைகள் – சாயம்போன கனவுகள் !!!

 வ்வொரு இரவின் நிசப்தத்திலும்
ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள்
எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய்
தலை வரை கம்பளியை இழுத்து மூடி
தூக்கத்தை அழைக்கிறேன் என்னை
அணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால்
தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,,
 
தாய் மடியை நினைவூட்டும் ‘மெமரிபோர்ம்’ மெத்தையும்
‘கூஸ்பெதர்’ தலைஅணையும்
இப்போதெல்லாம் என்னை ஏனோ
முள்ளாய் மாறி தினம் தினம்
என்னை வதம் செய்கிறது ,,..
  
தூக்கம் வராமல் உருண்டு படுத்து
ஏதோ ஒருநொடியில் உறங்கிப் போனாலும்
நடுஜாமத்தின் அரைகுறை விழிப்பில்
என் தேகம் தந்த சூட்டில்
சூடாக்கி போயிருந்த தலையணையை
உன்மார்பு என்றெண்ணிப்புதைந்து
கொள்ளும்போது நெற்றிப்பொட்டில்
அறையும் கரைந்து விட்ட கனவுகளின் சாயம்,,,,,,

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இது எனது மீள் பதிவு !

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in கவிதைகள், காதல், நினைவுகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal. Bookmark the permalink.

21 Responses to பனித்துளிசங்கர் கவிதைகள் – சாயம்போன கனவுகள் !!!

  1. இராமசாமி கண்ணண் சொல்கிறார்:

    நல்லா இருக்கப்பு .. பின்றீங்க…

  2. ஜெகதீஸ்வரன். சொல்கிறார்:

    அருமை நண்பரே!@- ஜெகதீஸ்வரன்http://sagotharan.wordpress.com/

  3. Chitra சொல்கிறார்:

    ஆஹா… மீண்டும் ஒரு கலக்கல் கவிதை…. அருமை!

  4. கலாநேசன் சொல்கிறார்:

    //தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்//அருமை நண்பரே….

  5. Balaji saravana சொல்கிறார்:

    சும்மா நச்சுனு இருக்கு..செம கலக்கல் கவிதைகள்!

  6. LK சொல்கிறார்:

    /என் தேகம் தந்த சூட்டில்சூடாக்கி போயிருந்த தலையணையைஉன்மார்பு என்றெண்ணிப்புதைந்துகொள்ளும்போது நெற்றிப்பொட்டில்அறையும் கரைந்து விட்ட கனவுகளின் சாயம்,,,,//அருமை

  7. வெறும்பய சொல்கிறார்:

    அருமை நண்பரே….

  8. Kousalya சொல்கிறார்:

    //தலை வரை கம்பளியை இழுத்து மூடிதூக்கத்தை அழைக்கிறேன் என்னைஅணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால்தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,//நல்லா இருக்குங்க…

  9. ச.அருண்பிரசாத். சொல்கிறார்:

    ரொம்ப நல்லாயிருக்கு,உணர்ந்து எழுதிய வரிகள்.

  10. சசிகுமார் சொல்கிறார்:

    சூப்பர் தல கலக்குங்க

  11. Ananthi சொல்கிறார்:

    அருமையான வரிகள்.. கனவிலும் கவிதை.. ஹ்ம்ம்.. :-)))

  12. MANO சொல்கிறார்:

    very nice….mano

  13. சே.குமார் சொல்கிறார்:

    ஆஹா… அருமையான வரிகள்..!

  14. க.பாலாசி சொல்கிறார்:

    நல்லாயிருக்குங்க சங்கர்… ரசித்தேன்…

  15. sugirtha சொல்கிறார்:

    நல்லா இருக்கு 🙂

  16. மதுரை சரவணன் சொல்கிறார்:

    //என் தேகம் தந்த சூட்டில்சூடாக்கி போயிருந்த தலையணையைஉன்மார்பு என்றெண்ணிப்புதைந்துகொள்ளும்போது நெற்றிப்பொட்டில்அறையும் கரைந்து விட்ட கனவுகளின் சாயம்,,,,,,//அருமை, வாழ்த்துக்கள்அருமை

  17. வெங்கட் நாகராஜ் சொல்கிறார்:

    கனவிலும் அழகிய கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே.

  18. Shri ப்ரியை சொல்கிறார்:

    தனிமை தவிப்பின் வெளிப்பாடு ரொம்ப அழகான வார்த்தை நயம்…. அருமைங்க….

  19. நெருப்புப் பூ சொல்கிறார்:

    மெய்யன்பை உள வலியை மீச்சிறப்பாய் எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.நன்று. தொடர்க.

வெங்கட் நாகராஜ் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி